கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் |

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவரது யூடியூப் சேனலில் ஒரு பாட்கேஸ்ட் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விருதுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அது பைத்தியக்காரத்தனம். நான் தேசிய விருதுகளையும் சேர்த்து தான் கூறுகிறேன். 7 கோடி மக்களுக்கும் சேர்த்து இவர் தான் சிறந்த நடிகர், இதான் சிறந்த படம் சொல்ல இவங்க என்ன மேதாவிகளா?
நீங்கள் சர்வே எடுங்கள், மக்கள் சர்வே தான் முக்கியம். நீங்க 8 பேரு முடிவு செய்வது தான் புல் சிட். எனக்கு விருதுகள் தராததால் இதை நான் கூறவில்லை. நான் விருது வாங்கினாலும், போகும் வழியில் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவேன், அது தங்கமாக இருந்தால் அடகு வைத்து அந்தப் பணத்தில் அன்னதானம் செய்வேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.