பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 'முன்னாள் தலைவர் விஷால் மீது கூறப்பட்ட 8 கோடி ரூபாய் முறைகேடு பிரச்னை என்ன ஆனது' என்ற கேள்விக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமி அளித்த பதிலில் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது 8 கோடி வரை வைப்புநிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார். அதை விசாரிப்பதற்காக அவர் தலைமையிலேயே கமிட்டி போடப்பட்டிருக்கிறது. விஷால் தலைமைக்கு பிறகு 2 ஆண்டுகள் சங்கம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அரசு சார்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கையும் வந்திருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாகவும் கூடி பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.