தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 'முன்னாள் தலைவர் விஷால் மீது கூறப்பட்ட 8 கோடி ரூபாய் முறைகேடு பிரச்னை என்ன ஆனது' என்ற கேள்விக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமி அளித்த பதிலில் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது 8 கோடி வரை வைப்புநிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார். அதை விசாரிப்பதற்காக அவர் தலைமையிலேயே கமிட்டி போடப்பட்டிருக்கிறது. விஷால் தலைமைக்கு பிறகு 2 ஆண்டுகள் சங்கம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அரசு சார்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கையும் வந்திருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாகவும் கூடி பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.