தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

எல்லா ஹீரோக்களுமே தங்கள் கேரியரில் ஒரு படத்திலாவது இரண்டு வேடங்களில் நடித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் 'புதிர்'. இந்த படம் 'அஜேயா' என்ற பெயரில் கன்னடத்திலும் தயாரானது. விஜய், அழகு என்ற இரண்டு கேரக்டரில் முரளி நடித்தார்.
தமிழ் பதிப்பில் சந்தியாவும், கன்னட பதிப்பில் லீலாவதியும் நாயகியாக நடித்தார்கள். இரு மொழியிலும் தனித்தனி நடிகர்கள் நடித்தனர். இரண்டு மொழிகளுக்கும் இளையராஜா இசை அமைத்தார். சித்தலிங்கையாக இயக்கி தயாரித்தார். முரளி இணை தயாரிப்பாளராக இருந்தார்.
பணக்கார பெண்ணான நாயகியின் சொத்துக்களை அபகரிக்க அவரது உறவினர்கள் திட்டமிடுவார்கள். ஆனால் அவளோ தான் காதலனை மணந்து சொத்துக்களை அவனுக்கு உடமையாக்க திட்டமிடுவாள். அதனால் உறவினர்கள் காதலனை போன்ற தோற்றம் கொண்ட இன்னொருவனை கொண்டு சொத்துக்களை அடைய திட்டம் போடுவார்கள். யார் திட்டம் வெற்றி பெற்றது என்பதுதான் படம்.