சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை |

எல்லா ஹீரோக்களுமே தங்கள் கேரியரில் ஒரு படத்திலாவது இரண்டு வேடங்களில் நடித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் 'புதிர்'. இந்த படம் 'அஜேயா' என்ற பெயரில் கன்னடத்திலும் தயாரானது. விஜய், அழகு என்ற இரண்டு கேரக்டரில் முரளி நடித்தார்.
தமிழ் பதிப்பில் சந்தியாவும், கன்னட பதிப்பில் லீலாவதியும் நாயகியாக நடித்தார்கள். இரு மொழியிலும் தனித்தனி நடிகர்கள் நடித்தனர். இரண்டு மொழிகளுக்கும் இளையராஜா இசை அமைத்தார். சித்தலிங்கையாக இயக்கி தயாரித்தார். முரளி இணை தயாரிப்பாளராக இருந்தார்.
பணக்கார பெண்ணான நாயகியின் சொத்துக்களை அபகரிக்க அவரது உறவினர்கள் திட்டமிடுவார்கள். ஆனால் அவளோ தான் காதலனை மணந்து சொத்துக்களை அவனுக்கு உடமையாக்க திட்டமிடுவாள். அதனால் உறவினர்கள் காதலனை போன்ற தோற்றம் கொண்ட இன்னொருவனை கொண்டு சொத்துக்களை அடைய திட்டம் போடுவார்கள். யார் திட்டம் வெற்றி பெற்றது என்பதுதான் படம்.