நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நடிகர் விஷால் படங்கள் தயாரிக்க பைனான்சியர் அன்புச் செழியனிடம் ரூ.21 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அதற்கு பதிலாக விஷால் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையை தங்களுக்கு தர வேண்டும் என கூறியது. ஆனால் இதை மீறி விஷால் படத்தை வெளியிட்டார். மாறாக லைகாவிற்கு பணத்தையும் தரவில்லை. இதையடுத்து லைகா நிறுவனம் விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் லைகாவிற்கு தர வேண்டிய ரூ.21 கோடியை 30 % வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் நீங்கள் திவால் ஆனவர் என அறிவிக்க தயாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, ரூ.10 கோடியை விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர்.