சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

நடிகர் விஷால் படங்கள் தயாரிக்க பைனான்சியர் அன்புச் செழியனிடம் ரூ.21 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அதற்கு பதிலாக விஷால் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையை தங்களுக்கு தர வேண்டும் என கூறியது. ஆனால் இதை மீறி விஷால் படத்தை வெளியிட்டார். மாறாக லைகாவிற்கு பணத்தையும் தரவில்லை. இதையடுத்து லைகா நிறுவனம் விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் லைகாவிற்கு தர வேண்டிய ரூ.21 கோடியை 30 % வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் நீங்கள் திவால் ஆனவர் என அறிவிக்க தயாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, ரூ.10 கோடியை விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர்.




