கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஆர்யன். இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று(நவ., 5) சென்னையில் நடந்தது. இதில் விஷ்ணு விஷால் பேசியது : நான் நடித்த எப்ஐஆர், கட்டாகுஸ்தி வரிசையில் ஆர்யன் படமும் வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளர் ஆகவும் நான் மகிழ்ச்சி.
ஆர்யன் பட கிளைமாக்ஸ் குறித்து சில விமர்சனங்கள் வந்தன. ஒரு சிலர் அந்த கிளைமேக்ஸ் குறித்து வேறு கருத்து தெரிவித்தனர். என்றைக்கும் ரசிகர்களுடைய உணர்வை நான் ஏற்றுக் கொள்வேன் அதன்படி ஏற்கனவே நாங்க எடுத்து வைத்துள்ள இன்னொரு கிளைமேக்சை இன்று முதல் படத்தில் சேர்க்கிறோம் . புது கிளைமாக்ஸ்க்கு மக்கள் இன்னும் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். தெலுங்கிலும் புது கிளைமாக்ஸ்சுடன் படம் வெளியாகயுள்ளது.
அடுத்து இரண்டு வானம் , கட்டா குஸ்தி 2, அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். சினிமாவில் 25வது படத்தை தொடப்போகிறேன். தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து ஜெயிப்பது மகிழ்ச்சி. என் மகன் பெயரில் இந்த படத்தை தயாரித்தேன். படத்தின் தலைப்பும் அவன் பெயர்தான் படம், அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வகையில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆர்யன் படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்தது படத்திற்கு கூடுதல் பலம். ஷ்ரத்தா ஸ்ரீநாத் என் லக்கி ஹீரோயின்.
இவ்வாறு அவர் பேசினார்.