தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஷ்ணு விஷால் நடிப்பில் நாளை (31ம் தேதி) வெளியாக உள்ள படம் 'ஆர்யன்'. அவரே தயாரித்தும் உள்ளார். தமிழில் தயாரானாலும் தெலுங்கு, மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளிவருவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கில் நாளை பாகுபலி படத்தின் தொகுப்பு படமான 'பாகுபலி: தி எபிக்' படமும், ரவி தேஜாவின் 'மாஸ் ஜாத்ரா' படமும் வெளியாவதால் தனது 'ஆர்யன்' தெலுங்கு ரிலீசை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெலுங்கு ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில்... 'பாகுபலி: தி எபிக்' மற்றும் 'மாஸ் ஜாத்ரா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதனை கணக்கில் கொண்டு நவம்பர் 7ம் தேதி 'ஆர்யன்' வெளியாகும். சினிமா என்பது போட்டி அல்ல, அது ஒரு கொண்டாட்டம். கொண்டாட்டங்களுக்கு அவற்றின் சொந்த இடமும் வெளிச்சமும் தேவை, என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தினை விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ளார். முழுக்க சைக்கோ த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது.