8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் |

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் சேர்த்து 170க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். ரஜினி 75வயதை தொடப்போகிறார். இந்த வயதில் இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ ரஜினி தான். இந்நிலையில் ஜெயிலர் 2வுக்குபின், சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். அதற்கடுத்து கமல் தயாரிக்கும் படத்தில், அவருடன் இணைந்து நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு இன்னமும் இயக்குனர் முடிவாகவில்லை. அதுதான் அவரின் கடைசி படம் என்று கோலிவுட்டில் சிலர் பற்ற வைக்க, அது பற்றி எரிகிறது.
இந்த செய்தி ரஜினி ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்தால், கடந்த பல ஆண்டுகளாக இதுதான் ரஜினியின் கடைசி படம் என்ற செய்தி அவ்வப்போது வரும், போகும். ஏன், ரஜினி கூட சினிமா போதும் என்று மனரீதியாக முடிவெடுத்து இருக்கிறார். ஆனாலும், ரஜினியால் நடிக்காமல் இருக்க முடியாது. ஒரு படம் வெற்றி அடைந்தவுடன் அல்லது நல்ல கதை கிடைத்தால் அடுத்த படத்தில் நடிக்த ஆர்வமாகிவிடுவார். அவரால் நடிக்காமல் வீட்டில் சும்மா இருக்க முடியாது.
எந்த இடத்திலும் அவர் இதுதான் கடைசி படம், இந்த படத்துக்குபின் நடிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. ரஜினியை வைத்து படம் தயாரிக்க, இயக்க ஏகப்பட்டபேர் கியூவில் நிற்கிறார்கள். ஆகவே, கமல் படம் கடைசி என்பது தவறான செய்தி. அவர் இன்னும் பல ஆண்டுகள் நடிப்பார். அதுவும் ஹீரோவாக நடித்துக் கொண்டே இருப்பார்கள் என்கிறார்கள்.