தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாடகி சின்மயின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி உள்ள படம் 'தி கேர்ள் பிரண்ட்'. ராஷ்மிகா மந்தனா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம். வருகிற நவம்பரி 7ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் புரமோசன் நிகழ்வுகள் தொடங்கி உள்ளது.
ஐதராபாத்தில் நடந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே.என் ராஷ்மிகாவை பாராட்டி பேசினார். அப்போது அவர் 'ராஷ்மிகா நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்' என்றார்.
இதனை மேடையிலேயே மறுத்து பேசிய ராஷ்மிகா, ''நான் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஆனால், இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். இதைத் தொடர்ந்து செய்யமுடியாது. 8 மணி நேரத்திற்குமேல் அதிகமாக வேலைபார்ப்பது நமது வாழ்க்கையை உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.
இந்த அதிக நேர வேலையைத் தவிர்க்கவில்லை என்றால் பின்னர் நாமே வருந்த வேண்டி வரும். உடல் நலமும், மனநலமும் கெட்டுவிடும். அலுவலகங்களில் 9 மணியிலிருந்து 5 மணி வரை என்று வேலை நேரம் உள்ளதுபோல், சினிமாத்துறையில் நமக்கும் அப்படியே இருக்க வேண்டும்.
அப்படியில்லாததால் மறுப்பு சொல்ல முடியாமல் நான் பல வேலைகளைச் செய்கிறேன். இருப்பினும் நான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன். குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம். எதிர்காலத்தை நினைத்து நான் இப்போது கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
ராஷ்மிகாவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் ராஷ்மிகாவை பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, 8 மணிநேர வேலையை வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாகவே 'ஸ்பிரிட், கல்கி 2' படங்களில் இருந்து அவர் விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.