கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தி கேர்ள் பிரெண்ட் படத்தை அடுத்து ஹிந்தியில் காக்டெயில் 2 , தெலுங்கில் மைசா போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும் இப்போது வரை அவர்கள் அதை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார் ராஷ்மிகா. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இரண்டு நாட்கள் எனக்கு விடுமுறை கிடைத்தது. அப்போது எனது நெருங்கிய தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பதற்காக இலங்கைக்கு சென்றிருந்தேன். அங்குள்ள அழகான பகுதிகளை சுற்றிப் பார்த்தோம். இது ஒரு மகிழ்ச்சியான சுற்று பயணமாக அமைந்தது'' என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.




