இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'மாற்றான், அனேகன், பிகில், லவ் டுடே, டிராகன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். தற்போது அர்ச்சனா கல்பாத்தி யூடியூப் தளத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தயாரிக்கும் படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, "பிரதீப் ரங்கநாதன் அடுத்து புதிதாக இயக்கி, நடிக்கவுள்ள படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றோம். அது ரொம்ப நல்ல கதை. இதன் படப்பிடிப்பு 2026ம் ஆண்டில் துவங்கி, 2026ம் ஆண்டிற்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார். ஏற்கனவே, ஏ.ஜி.எஸ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் 'லவ் டுடே, டிராகன்' என இரு படங்கள் வெளியாகி இரண்டும், தலா 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.




