பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என கொண்டாடப்பட்டவர் மறைந்த கே.பாலசந்தர். ரஜினி, கமல் எனும் இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவிற்கு தந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. கமலின் ஆஸ்தான குருவில் பாலசந்தர் முக்கியமானவர். இயக்குனர் கே பாலசந்தரின் நினைவு தினம் இன்று.
இதையொட்டி நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் பாலச்சந்தர், அவரது தோழர் நாகேஷிற்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம் என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.