ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கீர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? |

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடக்கப் போகிறது. அதுவும் 12 மாத முடிவில் அல்ல, 11 மாத முடிவில் என்பது ஆச்சரியமான ஒன்று.
அக்டோபர் முதல் வாரத்தில்தான் இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்தது. டிசம்பர் முடிவதற்குள் அது 250ஐக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டே மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ரஜினி கேங், பிபி 180, பிரைடே, ஒண்டிமுனியும் நல்லபாடனும், ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களின் வெளியீட்டுடன் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடக்கப் போகிறது.
இந்த வருடம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலும் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம். அதனால், இந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 275ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு மொழியிலும் நடக்காத ஒன்று இது.




