நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் |
மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை காவ்யா மாதவன். தமிழில் ‛என் மன வானில், காசி' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் திலீப் உடன் இணைந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதனால் இருவர் பற்றி அதிகம் கிசுகிசுகளும் எழுந்தன. இதன் காரணமாகவே நடிகர் திலீப் அவரது மனைவி மஞ்சு வாரியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை காவ்யா மாதவனையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே நடிகர் திலீப்புக்கு மஞ்சு வாரியாருக்கும் பிறந்த மீனாட்சி என்கிற மகளும் தற்போது இவர்கள் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மஞ்சு வாரியரின் தாயார் பிறந்தநாளும் மகள் மகாலட்சுமியின் பிறந்தநாளும் ஒரே நாளில் தான் வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரின் பிறந்த நாளையும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் நடிகை காவ்யா மாதவன். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.