தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு |
2017ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பிரபல தென்னிந்திய நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த வழக்கில் திலீப்பின் மனைவி, நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ சமீபத்தில் வெளியானது.
இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, ஏப்ரல் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். தான் சென்னையில் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும் 13ம் தேதி தன் வீட்டில் வைத்து விசாரணை நடத்தலாம் என்றும் போலீஸாருக்கு தகவல் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் காவ்யா மாதவனின் ஆலுவா வீட்டில் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். 11 மணிக்கு தொடங்கிய விசாரணை, 4.40 மணிக்கு நிறைவடைந்தது. போலீசாரிடம் இருந்த வீடியோ, ஆடியோவை அவரிடம் போட்டுக்காட்டி அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை விபரத்தை போலீசார் வெளியிடவில்லை.