சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலா இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இது. அவரும் நடிகை சமந்தாவும் சில வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டு 2021ல் பிரிந்தார்கள்.
அதன்பின் நாக சைதன்யா, சோபிதாவைக் காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்ற புகைப்படங்கள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அதன்பின் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது திருமண வீடியோவை அவர்கள் வெளியிடாமலேயே இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று அவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளில் அந்த வீடியோவை சோபிதா வெளியிட்டு, “காற்று எப்போதும் வீட்டை நோக்கி வீசுகிறது. டெக்கானில் திரும்பி, கணவன் என்று அழைக்கும் ஆணுடன் சூரியனைச் சுற்றி ஒரு பிரம்மிப்பான பயணம் முடிந்து, நான் புதிதாக உணர்கிறேன். நெருப்பால் தூய்மைப்படுத்தப்பட்டது போல. திருமதியாக ஒரு வருடம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நாகசைதன்யா, “உன் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது ஆசீர்வாதம் என் அன்பே, இனிய திருமண நாள் வாழ்த்துகள்,” என்று கமெண்ட் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாகசைதன்யாவின் முன்னாள் மனைவியான சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொருவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு வருடமாக வெளியிடாத திருமண வீடியோவை, சோபிதா இப்போது ஏன் வெளியிட வேண்டும் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.




