அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
தெலுங்கில் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படம் ‛தண்டேல்'. பிப்ரவரி 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதால் தற்போது படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் படம் மீனவர் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. கதைப்படி மீனவரான நாக சைதன்யா, மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது தவறுதலாக பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்தபோது, அங்குள்ள காவல் துறையினர் அவரை கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதையடுத்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, இந்தியாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் சில சக்தி வாய்ந்த வசனங்களை பேசும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
அதனால் இந்த படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் வெளியிட்டு பான் இந்தியா படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஹிந்தி சினிமா ரசிகர்கள் தேச பக்தி படங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதால் இந்த தண்டேல் படத்தை பாலிவுட்டில் பிரமாண்டமாக வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக புரமோஷன்களில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.