காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
தெலுங்கில் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படம் ‛தண்டேல்'. பிப்ரவரி 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதால் தற்போது படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் படம் மீனவர் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. கதைப்படி மீனவரான நாக சைதன்யா, மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது தவறுதலாக பாகிஸ்தான் கடலுக்குள் நுழைந்தபோது, அங்குள்ள காவல் துறையினர் அவரை கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதையடுத்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, இந்தியாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் சில சக்தி வாய்ந்த வசனங்களை பேசும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.
அதனால் இந்த படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் வெளியிட்டு பான் இந்தியா படமாக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஹிந்தி சினிமா ரசிகர்கள் தேச பக்தி படங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதால் இந்த தண்டேல் படத்தை பாலிவுட்டில் பிரமாண்டமாக வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக புரமோஷன்களில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.