'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் |

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ‛ஆர் ஆர் ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்தபடியாக மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ராவை முதன்மைப்படுத்தி தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். அடுத்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சிங்கத்தை வைத்து வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார் ராஜமவுலி. அதில், கென்யாவில் தன்னுடைய அட்வெஞ்சர் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதை தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ராஜமவுலி பகிர்ந்தவுடன், அப்படத்தின் நாயகனாக மகேஷ் பாபு, தன்னுடைய போக்கிரி படத்தின் டயலாக் மூலம் ஒரு பதில் கொடுத்து இருந்தார். அதையடுத்து அவரது மனைவி நர்மதா, அந்த வீடியோவிற்கு கிளாப்சிங் எமோஜிகளை வெளியிட்டு இருந்தார். இந்த கிளிப்ஸ் வீடியோ ராஜமவுலியின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகி உள்ளது. விலங்குகளை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் சிங்கத்துடன் மகேஷ் பாபு சண்டையிடும் காட்சிகளும் இடம்பெறப் போகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு கென்யா நாட்டு காடுகளில் நடைபெற உள்ள இந்த படத்திற்கு, எம் .எம். கீரவாணி இசையமைக்க, பி.எஸ். வினோத் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.