ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களை அடுத்து தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா கடந்த வாரம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்போது படத்தின் தலைப்பு அறிவிப்பின் வீடியோ ஒளிபரப்பு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அப்போது பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் மீது பெரிய நம்பிக்கை இல்லை. என் பின்னால் அனுமன் ஆசி இருப்பதாக எனது அப்பா விஜயேந்திர பிரசாத் ஒரு முறை கூறினார். இந்த தொழில்நுட்ப சிக்கல் வந்துள்ளதால் எனக்குக் கோபம் வந்துள்ளது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா ?. என் மனைவி அனுமனின் தீவிர பக்தை. அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள். எனக்கு அவர் மீதும் கோபம் வந்தது. என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு உதவுவானா என்று பார்ப்போம்,” என்று பேசினார்.
அவர் பேசியபின் தொழில்நுட்பக் கோளாறு சரியாகி, அந்த வீடியோ சரியான முறையில் ஒளிபரப்பானது. அப்படியென்றால் அனுமன், கடவுள் நம்பிக்கை இல்லாத ராஜமவுலிக்கும் உதவி செய்துள்ளார் என்றுதான் அர்த்தம்.
ராஜமவுலியின் இந்த பேச்சிற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, அவர் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார்கள். இதனிடையே, தீவிர இந்து மத பக்தரான, சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தெலங்கானா எம்எல்ஏ ராஜா சிங், ராஜமவுலிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




