தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

‛ஆர் ஆர் ஆர்' படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛வாரணாசி' என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய படத்தில் நடிக்கிறார்.
இந்த வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் மஞ்சள் நிற புடவை கெட்டப்பில் துப்பாக்கியை வைத்து யாரையோ அவர் குறி வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஆக்சன் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் படங்களில் நடிக்க தான் வாங்குவது போன்று 30 கோடி சம்பளம் பிரியங்கா சோப்ரா வாங்கி இருப்பதாக டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.