ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் வாரணாசி படத்தில் ஹீரோவாக மகேஷ்பாபு நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் கும்பா என்ற கேரக்டரில் வருகிறார். ராமாயண காலம், இந்த காலம் இரண்டையும் இணைக்கும் இந்த கதையில் வீல் சேரில் வரும் வில்லனாக பிருத்விராஜ் வரும் காட்சிகள் வெளி வந்துள்ளன. சில ஹாலிவுட் பட வில்லன் பாணியில் அவர் கேரக்டர் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீல் சேரில் ரோபோ கைகள் இருப்பதே அதற்கு காரணம்.
நீங்கள் என் படத்தில் நடிக்க முடியுமா என்று ராஜமவுலி மெசேஜ் அனுப்பியதும், அவர் ஆபீஸ் போய் கதை கேட்டு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் பிருத்விராஜ். அவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோ என்றாலும், மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்கிறார். அதற்கு ஹீரோவாக நடிப்பதை விட கூடுதலாக சம்பளம் வாங்குகிறார். அதை கொண்டு மலையாளத்தில் படங்கள் தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பும் சலார் படத்தில் வில்லனாக பிருத்விராஜ் நடித்தார்.
வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவருக்கும் ஹீரோவுக்கு இணையான முக்கியமான வேடம் என்று கூறப்படுகிறது. பொதுவாக ராஜமவுலி படங்களில் ஒரு வித கவர்ச்சி பாடல் இருக்கும். அதில் ஆடுபவர் யார் என்பதும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது. வாரணாசி தலைப்பு அறிவிப்பு விழாவில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு ஆடினார். அவர் படத்திலும் குத்தாட்டம் போட வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை.