நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

தக் லைப் தோல்விக்கு பின் படம் இயக்காமல் இருக்கிறார் மணிரத்னம். மீண்டும் அவர் சிம்புவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. அது நடக்கவில்லை. பைசன் வெற்றிக்குபின் ஸ்டார் ஆன விக்ரம் மகன் துருவ்வை ஹீரோவாக வைத்து ஒரு யூத்புல் சப்ஜெக்ட் எடுக்கப்போகிறார் என்று பேச்சு எழுந்தது. இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
கார்த்திக் மகன் கவுதமை வைத்து கடல் எடுத்தார். மம்முட்டி மகன் துல்கரை வைத்து ஓ காதல் கண்மணி எடுத்தார். பொன்னியின் செல்வனில் பிரபு மகன் விக்ரம்பிரபு நடித்தார். இப்படி தனது படத்தில் பணியாற்றிய ஹீரோக்களின் வாரிசுகளை தனது படத்தில் நடிக்க வைப்பது மணிரத்னத்துக்கு பிடிக்கும். அந்தவகையில் ராவணன், பொன்னியின் செல்வனில் தன்னுடைய பணியாற்றி விக்ரம் மகனை அடுத்த படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்றார்கள்.
இதற்கிடையே, விஜய்சேதுபதியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறார் என்று புது தகவலும் கசிய, மணிரத்னம் அடுத்த பட ஹீரோ துருவ்வா? விஜய்சேதுபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக மணிரத்னம் இயக்கும் படங்களை அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அல்லது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார். அந்த படங்களில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் சம்பளம் மிகக்குறைவாக இருக்கும். ஆனாலும் மணிரத்னம் படம் என்பதால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் பலர் நடிப்பார்கள்.