‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தக் லைப் தோல்விக்கு பின் படம் இயக்காமல் இருக்கிறார் மணிரத்னம். மீண்டும் அவர் சிம்புவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. அது நடக்கவில்லை. பைசன் வெற்றிக்குபின் ஸ்டார் ஆன விக்ரம் மகன் துருவ்வை ஹீரோவாக வைத்து ஒரு யூத்புல் சப்ஜெக்ட் எடுக்கப்போகிறார் என்று பேச்சு எழுந்தது. இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
கார்த்திக் மகன் கவுதமை வைத்து கடல் எடுத்தார். மம்முட்டி மகன் துல்கரை வைத்து ஓ காதல் கண்மணி எடுத்தார். பொன்னியின் செல்வனில் பிரபு மகன் விக்ரம்பிரபு நடித்தார். இப்படி தனது படத்தில் பணியாற்றிய ஹீரோக்களின் வாரிசுகளை தனது படத்தில் நடிக்க வைப்பது மணிரத்னத்துக்கு பிடிக்கும். அந்தவகையில் ராவணன், பொன்னியின் செல்வனில் தன்னுடைய பணியாற்றி விக்ரம் மகனை அடுத்த படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்றார்கள்.
இதற்கிடையே, விஜய்சேதுபதியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறார் என்று புது தகவலும் கசிய, மணிரத்னம் அடுத்த பட ஹீரோ துருவ்வா? விஜய்சேதுபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக மணிரத்னம் இயக்கும் படங்களை அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அல்லது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார். அந்த படங்களில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் சம்பளம் மிகக்குறைவாக இருக்கும். ஆனாலும் மணிரத்னம் படம் என்பதால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் பலர் நடிப்பார்கள்.