என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தக் லைப் தோல்விக்கு பின் படம் இயக்காமல் இருக்கிறார் மணிரத்னம். மீண்டும் அவர் சிம்புவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டது. அது நடக்கவில்லை. பைசன் வெற்றிக்குபின் ஸ்டார் ஆன விக்ரம் மகன் துருவ்வை ஹீரோவாக வைத்து ஒரு யூத்புல் சப்ஜெக்ட் எடுக்கப்போகிறார் என்று பேச்சு எழுந்தது. இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
கார்த்திக் மகன் கவுதமை வைத்து கடல் எடுத்தார். மம்முட்டி மகன் துல்கரை வைத்து ஓ காதல் கண்மணி எடுத்தார். பொன்னியின் செல்வனில் பிரபு மகன் விக்ரம்பிரபு நடித்தார். இப்படி தனது படத்தில் பணியாற்றிய ஹீரோக்களின் வாரிசுகளை தனது படத்தில் நடிக்க வைப்பது மணிரத்னத்துக்கு பிடிக்கும். அந்தவகையில் ராவணன், பொன்னியின் செல்வனில் தன்னுடைய பணியாற்றி விக்ரம் மகனை அடுத்த படத்தில் நடிக்க வைக்கப்போகிறார் என்றார்கள்.
இதற்கிடையே, விஜய்சேதுபதியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறார் என்று புது தகவலும் கசிய, மணிரத்னம் அடுத்த பட ஹீரோ துருவ்வா? விஜய்சேதுபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக மணிரத்னம் இயக்கும் படங்களை அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அல்லது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார். அந்த படங்களில் நடிப்பவர்கள், பணியாற்றுபவர்கள் சம்பளம் மிகக்குறைவாக இருக்கும். ஆனாலும் மணிரத்னம் படம் என்பதால் சம்பளம் பற்றி கவலைப்படாமல் பலர் நடிப்பார்கள்.