'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
தமிழ் நடிகர்களிலேயே அதிக அளவில் நட்புக்காக பல படங்களில், சில நிமிடங்கள் மட்டுமல்ல, சில நொடிகள் கூட வந்து போகும் கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து கொடுப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் திரைப்படத்தில் வெறுமனே சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள போட்டோவில் தெரியும் புகைப்படமாக மட்டுமே சில காட்சிகளில் நட்புக்காக நடித்தார் விஜய் சேதுபதி.
தொடரும் படம் பார்த்த பலருக்கும் விஜய் சேதுபதியின் இந்த சிறப்பு தோற்றம் மற்றும் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்த பாரதிராஜா, நடிகர் இளவரசு ஆகியோரின் வருகை ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்திருக்கும். இந்த படத்தில் ஷோபனாவுக்கு ஜோடி என்கிற விதமாகத்தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் பாரதிராஜா என்கிற ஸ்டன்ட் மாஸ்டரிடம் உதவியாளர்களாக மோகன்லாலும், விஜய்சேதுபதியும் பணிபுரியும் போது நட்பாக இருக்கிறார்கள் என்றும் விஜய்சேதுபதியின் மரணத்திற்கு பிறகு ஷோபனாவை மோகன்லால் மறுமணம் செய்து கொண்டு கேரளாவிற்கு அழைத்து செல்கிறார் என்றும் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மோகன்லால் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இளம் பருவ மோகன்லால் உடலில் ரோப் கட்டி சண்டை காட்சிக்கு தயாராவது போலவும் அதை விஜய் சேதுபதி அவருக்கு கட்டி விடுவது போலவும் அருகில் பாரதிராஜா நின்று மேற்பார்வை பார்ப்பது போலவும் இடம் பெற்றுள்ளது. இதில் விஜய்சேதுபதி தவிர பாரதிராஜா மற்றும் மோகன்லால் ஆகியோரின் இளம் உருவங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இந்த புகைப்படத்தை தானும் பகிர்ந்து கொண்டுள்ள விஜய்சேதுபதி, “மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.