டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தமிழ் நடிகர்களிலேயே அதிக அளவில் நட்புக்காக பல படங்களில், சில நிமிடங்கள் மட்டுமல்ல, சில நொடிகள் கூட வந்து போகும் கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து கொடுப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் திரைப்படத்தில் வெறுமனே சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள போட்டோவில் தெரியும் புகைப்படமாக மட்டுமே சில காட்சிகளில் நட்புக்காக நடித்தார் விஜய் சேதுபதி.
தொடரும் படம் பார்த்த பலருக்கும் விஜய் சேதுபதியின் இந்த சிறப்பு தோற்றம் மற்றும் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்த பாரதிராஜா, நடிகர் இளவரசு ஆகியோரின் வருகை ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்திருக்கும். இந்த படத்தில் ஷோபனாவுக்கு ஜோடி என்கிற விதமாகத்தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் பாரதிராஜா என்கிற ஸ்டன்ட் மாஸ்டரிடம் உதவியாளர்களாக மோகன்லாலும், விஜய்சேதுபதியும் பணிபுரியும் போது நட்பாக இருக்கிறார்கள் என்றும் விஜய்சேதுபதியின் மரணத்திற்கு பிறகு ஷோபனாவை மோகன்லால் மறுமணம் செய்து கொண்டு கேரளாவிற்கு அழைத்து செல்கிறார் என்றும் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மோகன்லால் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இளம் பருவ மோகன்லால் உடலில் ரோப் கட்டி சண்டை காட்சிக்கு தயாராவது போலவும் அதை விஜய் சேதுபதி அவருக்கு கட்டி விடுவது போலவும் அருகில் பாரதிராஜா நின்று மேற்பார்வை பார்ப்பது போலவும் இடம் பெற்றுள்ளது. இதில் விஜய்சேதுபதி தவிர பாரதிராஜா மற்றும் மோகன்லால் ஆகியோரின் இளம் உருவங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இந்த புகைப்படத்தை தானும் பகிர்ந்து கொண்டுள்ள விஜய்சேதுபதி, “மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.