'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பிளஸ்சி. கடந்த வருடம் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ‛ஆடுஜீவிதம்' படத்தை இயக்கியது இவர்தான். இவரது மகன் ஆதித் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார். மோகன்லாலை வைத்து ‛பிரம்மராம், தன்மாத்ரா, பிரணயம்' என மூன்று படங்களை இயக்கியுள்ளார் பிளஸ்சி.
அது மட்டுமல்ல மோகன்லால் நடித்த ‛நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே பிளஸ்சியும் மோகன்லாலும் நெருங்கிய நண்பர்கள். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மோகன்லால், “நிஜமாகவே எனது மகன் திருமண நிகழ்வில் நான் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதே போன்ற உணர்வில் தான் நான் இருக்கிறேன். இதுவே இயக்குனர் பிளஸ்சி மற்றும் அவரது குடும்பத்துடன் நான் எந்த அளவிற்கு நெருக்கமானவன் என்பதை சொல்லும்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.




