சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான 'சர்வம் மாயா' திரைப்படம் கிட்டத்தட்ட 150 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாகவே இறங்கு முகத்தில் இருந்த நிவின்பாலியின் மார்க்கெட்டையும் அந்த படம் தூக்கி நிறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் நிவின்பாலி நடித்த 'பேபி கேர்ள்' திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் தற்போது நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதிச்சாயா' என்கிற படம் வரும் மார்ச் 26ம் தேதி வெளியாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பை நடிகர் நிவின்பாலியே வெளியிட்டுள்ளார். அரசியல் பின்னணியில் தந்தை, மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என்பதுடன் பல கமர்சியலான வெற்றி படங்களையும் கொடுத்தவர் என்பதால் இந்த படமும் நிவின்பாலிக்கு ஓரளவு வரவேற்பை பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நான்கு மாதத்திற்குள் நிவின்பாலியின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாவது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.