மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பிளஸ்சி. கடந்த வருடம் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ‛ஆடுஜீவிதம்' படத்தை இயக்கியது இவர்தான். இவரது மகன் ஆதித் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார். மோகன்லாலை வைத்து ‛பிரம்மராம், தன்மாத்ரா, பிரணயம்' என மூன்று படங்களை இயக்கியுள்ளார் பிளஸ்சி.
அது மட்டுமல்ல மோகன்லால் நடித்த ‛நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே பிளஸ்சியும் மோகன்லாலும் நெருங்கிய நண்பர்கள். இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மோகன்லால், “நிஜமாகவே எனது மகன் திருமண நிகழ்வில் நான் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதே போன்ற உணர்வில் தான் நான் இருக்கிறேன். இதுவே இயக்குனர் பிளஸ்சி மற்றும் அவரது குடும்பத்துடன் நான் எந்த அளவிற்கு நெருக்கமானவன் என்பதை சொல்லும்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.