காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக 'சர்வம் மாயா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இளம் இயக்குனர் அகில் சத்யன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலும் செய்தது. சொல்லப்போனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நிவின்பாலிக்கு இந்த படம் மீண்டும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக அகில் சத்யன் இயக்க உள்ள படத்தில் மீண்டும் நிவின்பாலி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அகில் சத்யனே கூறியுள்ளார். இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறதாம். இன்னும் சொல்லப்போனால் ஹிந்தியில் வெளியான 'ஏ ஜவானி ஹாய் தீவானி' என்கிற படத்தை போல நாங்கள் அடுத்து இணைய இருக்கும் படத்தை தற்போது 'ஏ ஜவானி ஆலுவா தீவானி' என்றுதான் காமெடியாக குறிப்பிட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் அகில் சத்யன்.




