விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாவீரன். இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛எனக்கும், விஜய்சேதுபதிக்கும் எந்த போட்டியும் இல்லை. அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். அது விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. மாவீரன் படத்தில் அவர் கொடுத்த குரலுக்கு ஒரு பைசா கூட விஜய் சேதுபதி சம்பளம் பெறவில்லை என்று கூறினார்.
அதையடுத்து அவர்கள் இணையும் படம், மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படமாக கூட இருக்குமோ என்கிற யூகங்கள் எழுந்துள்ளன.