37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் |

சமீபத்தில் தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய தி கேர்ள் பிரண்ட் என்கிற படம் வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. நடிகரும், பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இதை இயக்கியிருந்தார். படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட திரை உலகை சேர்ந்த தீக்ஷித் ஷெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். கன்னடத்தில் அவர் முன்னணி நடிகர்கள் வரிசையில் இல்லாவிட்டாலும் கேர்ள் ப்ரண்ட் படத்தின் மூலம் அவருக்கு திடீர் புகழ் வெளிச்சம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அவர் கன்னடத்தில் ஹீரோவாக நடித்துள்ள பேங்க் ஆப் பாக்கியலட்சுமி என்கிற படத்தை இன்று ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போய், வரும் நவம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு காரணம் இதே தேதியிலேயே கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் வெளியாவதால், போட்டியை தவிர்க்கும் விதமாக இந்த படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. வங்கி கொள்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷேக் காசர்கோடு என்பவர் இயக்கியுள்ளார்.