மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யா, சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆந்திராவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா, சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என்றும் அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார்.
இவரது பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் வேணு சுவாமியை அழைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் தனது தவறை முழு மனதுடன் ஒப்புக்கொண்ட வேணு சுவாமி, மகளிர் உரிமை ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக தனது மன்னிப்பையும் அளித்துள்ளார்.