விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யா, சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆந்திராவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா, சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என்றும் அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார்.
இவரது பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் வேணு சுவாமியை அழைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் தனது தவறை முழு மனதுடன் ஒப்புக்கொண்ட வேணு சுவாமி, மகளிர் உரிமை ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக தனது மன்னிப்பையும் அளித்துள்ளார்.