ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். சில நாட்களுக்கு முன்பு தன் மீது சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதல் நடத்தியதாக சொல்லி 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்தார். அதில் கேரளாவை சேர்ந்த பிரபலமான நகைக்கடை உரிமையாளர்களின் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரும் ஒருவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் விசாரணைக்கு ஆளானார். அதைத்தொடர்ந்து 6 நாட்களில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.
இவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் காக்கநாடு சிறையின் டிஐஜி மற்றும் சூப்பரின்டென்ட் இருவரும் இவருக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளை செய்து கொடுத்து, சலுகைகளையும் வழங்கி உள்ளனர். குறிப்பாக இவரை சந்திக்க வந்த மூன்று நபர்களை சிறைக்குள் அனுமதித்ததுடன் அவர்களது பெயர்களையும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யாமல் விட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இந்த இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.