‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார் ஹனிரோஸ். “இதுநாள் வரை அமைதியாக இருந்த நான் இப்போது சட்டம் பெண்களுக்காக என்னென்ன பாதுகாப்பு உரிமைகளை வழங்கியுள்ளதோ அதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டு இது போன்ற சைபர் கிரைம் ஆசாமிகள் மீது சட்டரீதியான போரை துவங்கியுள்ளேன்” என்று சமீபத்தில் கூறியவர், ஞாயிறு இரவு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார்.
இதன் உடனடி நடவடிக்கையாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார். மேலும் இதற்கு முன் ஹனிரோஸ் கூறியபோது, செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீதும் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளார். விரைவில் அந்த நபரும் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.