நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார் ஹனிரோஸ். “இதுநாள் வரை அமைதியாக இருந்த நான் இப்போது சட்டம் பெண்களுக்காக என்னென்ன பாதுகாப்பு உரிமைகளை வழங்கியுள்ளதோ அதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டு இது போன்ற சைபர் கிரைம் ஆசாமிகள் மீது சட்டரீதியான போரை துவங்கியுள்ளேன்” என்று சமீபத்தில் கூறியவர், ஞாயிறு இரவு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார்.
இதன் உடனடி நடவடிக்கையாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார். மேலும் இதற்கு முன் ஹனிரோஸ் கூறியபோது, செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீதும் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளார். விரைவில் அந்த நபரும் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.