'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்து வசூலை குவித்து வரும் படம் ‛புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த சிறுவனை ஐந்தாம் தேதி நேரில் சென்று பார்க்க அல்லு அர்ஜுன் தயாரான போது, காவல்துறை அவருக்கு தடை விதித்திருந்தது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு அல்லு அர்ஜுன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்கள். என்றாலும் அதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்று, இன்றைய தினம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுவனின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அப்போது மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்துள்ள அல்லு அர்ஜுன், சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தார் . அல்லு அர்ஜுன் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியிருக்கிறது.