பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்து வசூலை குவித்து வரும் படம் ‛புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த சிறுவனை ஐந்தாம் தேதி நேரில் சென்று பார்க்க அல்லு அர்ஜுன் தயாரான போது, காவல்துறை அவருக்கு தடை விதித்திருந்தது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு அல்லு அர்ஜுன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்கள். என்றாலும் அதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்று, இன்றைய தினம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுவனின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அப்போது மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்துள்ள அல்லு அர்ஜுன், சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தார் . அல்லு அர்ஜுன் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியிருக்கிறது.