கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நடிகை ஹனிரோஸ், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன்னை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சமூக வலைதளத்தில் ஹனிரோஸ் பற்றி ஆபாசமாக பதிவிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கும்பளம் பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த நகை கடை அதிபர் பாபி செம்மனூர் மீதும் ஹனிரோஸ் புகார் அளித்தார். அவரது நகை கடை திறப்பு விழாவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தன்னை பழிவாங்க அவதூறு பரப்புவதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் பாபி செம்மன்னூர் மீது ஜாமினில் வெளிவர முடியாத 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று வயநாட்டில் உள்ள விடுதியில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த தொழிலதிபர் பாபி செம்மன்னூரை போலீசார் விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்து சென்றனர். மேலும் எர்ணாகுளம் ஜூடிசியல் கோர்ட்டில் நடிகை ஹனிரோஸ் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் பாபி செம்மன்னூரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பாபி செம்மன்னூர் கூறியிருப்பதாவது: எனது 2 நகைக்கடைகளின் திறப்பு விழா கண்ணூரில் நடைபெற்றது. இதில் நடிகை ஹனிரோஸ் கலந்துகொண்டு கடைகளை திறந்து வைத்தார். அவர் நகைகளை அணிந்து நடனமாடினார். அதுகுறித்து நான் ஆக்கப்பூர்வமாக சில கருத்துகளை பதிவிட்டேன். அது தவறாக இரட்டை அர்த்தத்தில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் நடிகைக்கு மன வருத்தம் ஏற்பட்டது. அதேபோல எனக்கும் மன வருத்தம் ஏற்பட்டு உள்ளது.
நான் வேண்டுமென்றே அப்படி பதிவிடவில்லை. சில நேரம் காமெடிக்காக சில கருத்துகளை இதுபோல பதிவிடுவது உண்டு. அது எனது தொழிலில் மார்க்கெட்டிங் நுட்பத்தின் ஒரு பாகமாகும். என்று கூறியுள்ளார்.