இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்கு சீனியர் நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில், வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் படம் 'சங்கராந்தி வஸ்துனம்'. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இவர் மகேஷ்பாபுவை வைத்து 2020ல் 'சரிலேறு நீக்கெவரு', வெங்கடேஷை வைத்து 'எப்2' மற்றும் 'எப்3' என இரண்டு ஹிட் படங்களையும் கொடுத்தவர். கடந்த 2023ல் பாலகிருஷ்ணாவை வைத்து 'பகவந்த் கேசரி' என்கிற ஆக்சன் படத்தை கொடுத்தவர். தற்போது இந்த சங்கராந்தி வஸ்துனம் படத்தையும் கமர்சியல் ஆக்சன் படமாகவே உருவாக்கி உள்ளாராம்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அனில் ரவிபுடி பேசும்போது, “ஏற்கனவே எப்2 மற்றும் எப்3 என காமெடி டிராக்கில் பயணித்த நான் அதை விட்டு மாறுவோம் என்று தான் பகவந்த் கேசரி படம் பண்ணினேன். அதேபோல இன்னொரு படம் பண்ண வேண்டும் என்றுதான் நடிகர் சிரஞ்சீவிக்கு என ஒரு கதையை எழுதினேன். அவருக்கும் அந்த கதை பிடித்திருந்தாலும் அவர் ஏற்கனவே சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அவரால் இதில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் வெங்கடேஷிடம் இந்த கதையை கூறினேன். அவரும் உடனே நடிக்க சம்மதித்தார்” என்று கூறியுள்ளார்.