Advertisement

சிறப்புச்செய்திகள்

கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து

08 டிச, 2025 - 05:57 IST
எழுத்தின் அளவு:
Carefully-written-screenplay-Parvathys-opinion-on-the-verdict-in-the-actress-case
Advertisement

மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் மலையாள நடிகைகளான பார்வதி, ரீமா கலிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் பெண்கள் நல அமைப்பு என்று ஒன்றைத் துவங்கி பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப்பும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட, விரைவில் இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்க வேண்டும் என அடிக்கடி அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் எர்ணாகுளம் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் திலீப் குற்றம் அற்றவர் என்றும் அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த சம்பவத்தில் முதன்மை குற்றவாளியாக பல்சர் சுனில் உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என நிரூபணம் ஆகி உள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரீமா கல்லிங்கள், பார்வதி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளனர். பார்வதி வெளியிட்டுள்ள பதிவில், “எது நீதி ? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதை இப்போது நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்த தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிற கருத்தை அவர் பலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர்தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் ... தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in