கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள திரையுலகம் கடந்த வருடம் சில அற்புதமான படங்களையும் அபரிமிதமான வசூலித்த படங்களையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. அதிலும் 'பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ்' போன்ற சிறிய பட்ஜெட்டில் பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாம் 100 கோடி, 200 கோடி என வசூலித்தன. அதேபோல கடந்த வருட இறுதியில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆசிப் அலி நடிப்பில் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த 'ரேகசித்திரம்' என்கிற திரைப்படம் வெளியானது. கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். 80களின் பின்னணியில் நடக்கும் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. புலனாய்வு திரில்லர் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கியுள்ளார். இவர் மம்முட்டி நடித்த 'தி பிரிஸ்ட்' என்கிற ஹாரர் படத்தை இயக்கியவர்.
இந்த படம் வெளியான நாளிலிருந்து இதற்கு மவுத் டாக் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 கோடி வசூல் களத்தில் இந்த படம் இணைந்துள்ளது. இந்த 2025ல் வெளியான மலையாள படங்களில் முதலில் 50 கோடி வசூலித்த படம் என்கிற பெயரையும் இந்த படம் தட்டி சென்றுள்ளது.