Advertisement

சிறப்புச்செய்திகள்

இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி

29 அக், 2025 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Another-sexual-assault-case-against-director-Ranjith-dismissed
Advertisement


மலையாள திரைகயுலகில் கடந்த வருடம் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பிரபலம் இல்லாத, நடிகைகள் என்று சொல்லிக் கொண்ட பலர், பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அளித்தார்கள். அதில் பிரபல இயக்குனர் ரஞ்சித் மீதும் பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டன. அதில் பெங்களூருவைச் சேர்ந்த ஆண் ஒருவர், நடிகர் ரஞ்சித் தன்னை ஆடிசனுக்காக வரவழைத்து பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்தார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட வருடம் அப்படிப்பட்ட ஒரு ஹோட்டலே அந்த இடத்தில் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து, வழக்கில் போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லை என கூறி அந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இன்னொரு பக்கம் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இயக்குனர் ரஞ்சித் தான் இயக்க இருந்த பாவேரி மாணிக்கம் என்கிற படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு தருவதாக சொன்னதாகவும் அந்த கதாபாத்திரம் குறித்து பேசுவதற்காக தன்னை கொச்சி கடவந்திராவில் உள்ள அவருடைய வீட்டிற்கு வர சொன்னதாகவும் அப்படி சென்றபோது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயற்சித்ததாகவும் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் நடந்த வருடம் என அவர் குறிப்பிட்டிருந்தது 2009ல். ஆனால் இவர் ரஞ்சித் மீது புகார் அளித்தது 2024ல் இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சம்பவம் நடந்து 15 வருடங்கள் தாமதமாக புகார் கூறப்பட்டு இருப்பதால் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாகவும் இருக்கிறது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ?மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ... கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in