‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

தமிழ்த் திரையுலகத்தில் சாதனை படைத்த மூன்று இசைக் கலைஞர்களின் பெயர்களை சென்னையில் உள்ள 3 தெருக்களுக்கு வைத்து இன்று பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
“வாராய் நீ வாராய்…”, “பொன்னான வாழ்வே மண்ணாகி…”, “கல்யாண சமையல் சாதம்…”, “புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே…”, “ஆசையே அலை போலே…”கொடுத்துப் பார் பார்…”, “வெள்ளிப் பனிமலையில்…”, “ஆயிரம் கரங்கள் நீட்டி…”, உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் பெயர், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற பக்திப் பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களைப் பாடியவரும் சில படங்களில் நடித்தவருமான சீர்காழி கோவிந்தராஜன் பெயர், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், சிவாஜிகணேசன் நடித்த பல படங்களுக்கும் கருப்பு வெள்ளை காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் பெயர், அவர் வசித்த டிமாண்டி சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் அத் தெருப் பெயர்களை ஸ்டாலின் திறந்து வைத்தார். திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இதற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.