பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
'கேஜிஎப், சலார்' படங்களை இயக்கிய கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் அடுத்ததாக ஜுனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம் ஒன்றை இயக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் ஆரம்பமானது. அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்து கொள்ள உள்ளார்.
ஜுனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு 2022ம் ஆண்டு அவரது பிறந்தநாளின் போது வெளியானது. 2023 ஏப்ரல் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது.
இப்படத்தின் தலைப்பு மே 20 அன்று ஜூனியர் என்டிஅரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனத் தெரிகிறது. படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குனர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது தற்காலிக தலைப்பு தான் என்கிறார்கள். கடந்த வாரம் தமிழில் வெளி வந்த டிராகன் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மீண்டும் ஒரு டிராகன் வருமா என்பது விரைவில் தெரிந்து விடும்.