Advertisement

சிறப்புச்செய்திகள்

பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : மெல்லிசை மன்னர் எம்எஸ்வி., இசையமைக்கத் தவறிய இருபெரும் தயாரிப்பு நிறுவனங்கள்

02 நவ, 2024 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Melisai-Mannar-MSV.,-two-big-production-houses-that-failed-to-make-music

இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே கேட்டு ரசிக்கும் வண்ணம், முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தின் சாரத்தோடு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரும் ரசிக்கும்படி, அந்தந்த ராக லட்சணங்களோடு, திரையிசையை மெல்லிசையாக்கித் தந்த இசைமேதைதான் 'மெல்லிசை மன்னர்' எம் எஸ் விஸ்வநாதன்.

இயக்குநரின் தேவையறிந்து, கதைக்குத் தேவையான, கதாபாத்திரங்களின் தன்மை உணர்ந்து, ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து இவர் தந்த பாடல்கள் அனைத்தும் தேனினும் இனிய தேவகானங்கள் என்றால் அது மிகையன்று. இசை ஒன்றைத் தவிர வேறேதும் அறியாத இவர், மற்றவரிடம் பழகும் விதமும், பிறரை நேசிக்கும் பண்பும், பேசும் தன்மையும் இவரது இசையைக் காட்டிலும் இனிமையானது எனலாம். இத்தகைய பெருமைக்குரிய இவர், தென்னிந்திய திரையுலகின் அனைத்து ஜாம்பவான் நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார்.

இவர் இசையமைக்காத தயாரிப்பு நிறுவனங்களோ, இயக்குனர்களோ இல்லை எனும் அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இரண்டு மிகப் பெரிய தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இவர் இசையமைத்ததே இல்லை என்பது துரதிர்ஷ்டமே.

1964ம் ஆண்டு நடிகரும், தயாரிப்பாளருமான சாண்டோ எம்எம்ஏ சின்னப்பதேவர் தனது “தேவர் பிலிம்ஸ்” சார்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடிப்பில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “வேட்டைக்காரன்”. பட விநியோகஸ்தர்கள் இந்தப் படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என தங்களது விருப்பத்தை தேவரிடம் கூறினர். தேவரும் அதற்கு செவி சாய்த்து எம்எஸ் விஸ்வநாதனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டிற்கு ஒரு பெரிய தொகையுடன் சென்று விபரத்தைக் கூற, தயக்கம் காட்டினார் எம் எஸ் விஸ்வநாதன்.

காரணம் பெரும்பாலான “தேவர் பிலிம்ஸ்” திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் 'திரையிசைத் திலகம்' கேவி மகாதேவன். அவருடைய வாய்ப்பை தான் பறிப்பதாக எண்ணி சுணக்கம் காட்டினார் எம்எஸ் விஸ்வநாதன். அப்போது சமையல் அறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது தாயார், அவரை அழைத்து, நீ இந்தப் படத்திற்கு இசையமைக்கக் கூடாது என திட்டவட்டமாகக் கூறியதால் அந்தப் பட வாய்ப்பினை அவர் நிராகரித்து விட்டார். காரணம் ஆரம்ப காலங்களில் எம்எஸ் விஸ்வநாதன் ஒரு கோரஸ் பாடகராக தனக்கு வாய்ப்பு தருமாறு கேவி மகாதேவனிடம் கேட்டபோது, உனக்கு இருக்கும் இசை ஞானத்திற்கு நீ ஒரு கோரஸ் பாடகராக சேர்ந்து பணியாற்றினால் உன்னை ஒரு கோரஸ் பாடகர் என்று இந்த திரையுலகம் முத்திரை குத்திவிடும் . எனவே நீ கோவையில் உள்ள “ஜுபிடர் பிக்சர்ஸ்” சென்று அங்கு இசையமைப்பாளர் எஸ்எம் சுப்பையா நாயுடுவிடம் இணைந்து பணிபுரிந்து வந்தால் அது உன் திரையிசை வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும் என நல்வழிகாட்டி அனுப்பி வைத்தார் கே வி மகாதேவன். அந்த நன்றியை என்றுமே மறக்காததன் விளைவுதான் பின்னாளில் தமிழ் திரையிசையின் 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்திற்கு உரியவரானார்.

அதேபோல், நடிகர் திலகம் சிவாஜியை வைத்து ஏராளமான சமூக, புராண மற்றும் இதிகாச திரைப்படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநர் ஏபி நாகராஜன் தனது “விஜயலக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்” சார்பில் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு கேவி மகாதேவனையே இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார். ஓரிரு திரைப்படங்களுக்கு குன்னக்குடி வைத்தியநாதனையும் பயன்படுத்தியதுண்டு. அவரது எந்த ஒரு திரைப்படத்திற்கும் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்ததே இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2 நாட்களில் ரூ.26 கோடி வசூலை எட்டிய லக்கி பாஸ்கர்2 நாட்களில் ரூ.26 கோடி வசூலை எட்டிய ... ஏன் பஞ்ச் டயலாக் பேசுவதில்லை? - துல்கர் சல்மான் ஓபன் டாக் ஏன் பஞ்ச் டயலாக் பேசுவதில்லை? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in