தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகின் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நேற்று தீபாவளி ரிலீஸாக தெலுங்கு மற்றும் தமிழில் அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே கதை அம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குறூப், கிங் ஆப் கொத்த உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை மாறி மாறி வெளிப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
அதே சமயம் சமீபத்தில் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசிய சில பஞ்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகின. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் சல்மானிடம் நீங்கள் ஏன் பஞ்ச் வசனம் பேசுவதில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “பஞ்ச் வசனங்களை சில ஹீரோக்கள் மட்டும் பேசினால் தான் அது பொருத்தமாக இருக்கும். நான் பேசினால் தம்பி இன்னும் நீ அந்த அளவுக்கு வளரவில்லை என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கிங் ஆப் கொத்த படத்தில் கூட அதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.