ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகின் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நேற்று தீபாவளி ரிலீஸாக தெலுங்கு மற்றும் தமிழில் அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே கதை அம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குறூப், கிங் ஆப் கொத்த உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை மாறி மாறி வெளிப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
அதே சமயம் சமீபத்தில் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசிய சில பஞ்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகின. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் சல்மானிடம் நீங்கள் ஏன் பஞ்ச் வசனம் பேசுவதில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “பஞ்ச் வசனங்களை சில ஹீரோக்கள் மட்டும் பேசினால் தான் அது பொருத்தமாக இருக்கும். நான் பேசினால் தம்பி இன்னும் நீ அந்த அளவுக்கு வளரவில்லை என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கிங் ஆப் கொத்த படத்தில் கூட அதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.




