ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தது போன்று கே.வி.மகாதேவன் திரையிசையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் வந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஒரு கட்டத்தில் மாகாதேவனுக்கு வாய்ப்புகள் குறைந்து விஸ்நாதன் - ராமமூர்த்திக்கு அந்த வாய்ப்புகள் சென்றன.
இந்த நிலையில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது அவரது தாயார் விஸ்வநாதன் கன்னத்தில் பளார் என்று அரைந்தாராம். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது, அவர் இசை உலகின் மாகாதேவன், அவரை உன்னால் வெல்ல முடியாது, ஆனாலும் முயற்சி செய்” என்றாராம்.
இந்த தகவலை எம்.எஸ்.விஸ்வநாதன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கே.வி.மகாதேவனுக்கு இன்று 23வது நினைவு நாள்.