ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! |

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மெட்டா ஏஐ-க்கு குரல் கொடுத்த முதல் இந்திய பிரபலம் என்ற சாதனையை தற்போது அவர் படைத்துள்ளார்.
இதுபற்றி தீபிகா வெளியிட்ட பதிவில், ‛‛மெட்டா ஏஐ-யில் நானும் ஒரு அங்கமாகி உள்ளேன். என் குரல் நீங்கள் இனி ஆங்கிலத்தில் நீங்கள் வாய்ஸ் சேட் செய்யலாம்'' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ் அப், ரேபான் மெட்டா, ஸ்மார்ட் கண்ணாடிகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பல தலங்களில் அவரது தனித்துவமான குரல் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு முன்பு மெட்டா ஏஐக்கு ஜான் சீனா, ஜுடி டென்ச் உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தார்கள். இப்போது தீபிகாவின் குரலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த மெட்டா ஏஐ மூலம் தீபிகாவின் குரல் ஒலிக்கப் போகிறது.