'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபகாலமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
'நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான 'வினோதய சித்தம்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் சமுத்திரக்கனி. அதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது எல்லாம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சமுத்திரக்கனி தெலுங்கில் பவன் கல்யாண், நானி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




