என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள இவர், 2026 சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளார். அதன் முன்னோட்டமாக தொடர்ந்து அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விஷயங்களில் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நாளை(ஜூன் 22) விஜய்யின் 50வது பிறந்தநாள், இதை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாட தயார் ஆனார்கள். ஆனால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கூறி விட்டார் விஜய்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.