‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
கடந்த வருடம் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் துணிச்சலாக வெளிவந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ஆனால் ஆச்சரியமாக பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது கர்நாடகாவை சேர்ந்த ஆண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அதிர்ச்சி அளித்தார்.
12 வருடங்களுக்கு முன்பு தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை பெங்களூருவில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு வர சொன்ன இயக்குனர் ரஞ்சித் அங்கே தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியும் வைத்தார் என்று தனது குற்றச்சாட்டில் கூறியிருந்தார். முதலில் கேரளாவில் இது குறித்து இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் பின்னர் அது கர்நாடகா காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது புகார் அளித்திருந்த அந்த நபர் கூறுவது அனைத்துமே பொய் என்றும், மேலும் சம்பவம் நடந்த உடனே இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளிக்காமல் 12 வருடங்கள் தாமதப்படுத்தியது எதற்காக என்கிற கேள்வியையும் இயக்குனர் ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கபட்டது.
மேலும் தன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த வித முகாந்திரமோ, ஆதாரங்களோ இல்லை எனக் கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.