சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் |
வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இறுதிமுயற்சி'. அக்டோபர் 10ல் ரிலீசாகிறது. தொழிலதிபரான ரஞ்சித், வியாபார நெருக்கடி காரணமாக ஒருவரிடம் 80 லட்சம் கடன் வாங்குகிறார். அவரோ கந்து வட்டி பார்ட்டி. கடன், வட்டியை திருப்பி தராதவர்களை டார்ச்சர் செய்கிறார். அந்த வில்லன் பிடியில் ரஞ்சித்தும், அவர் குடும்பமும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது கதை. அப்போது இக்கட்டான சூழலில் ஒரு முகம் தெரியாத கேரக்டர் ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுகிறது. ரஞ்சித், அவர் மனைவி, 2 குழந்தைகளை காப்பாற்றுகிறது. அந்த கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், ‛‛எனக்கும் விஜய்சேதுபதிக்கும் அதிகம் நட்பு இல்லை. ஆனாலும், கதை சொல்லி, வாய்ஸ் ஓவர் தரமுடியுமா என்று கேட்டோம். அவரோ மும்பையில் பிஸியாக இருந்தார். ஆனாலும், ஒரு நாள் அவரே சொந்த செலவில் பிளைட்டில் சென்னை வந்து, ஒரு சின்ன டப்பிங் தியேட்டரில் அந்த கேரக்டருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தார். ஒரு பைசா பணம் வாங்கவில்லை. அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்தது. கடனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவும், அவர்களுக்கு ஆறுதலாக பேசும் விஜய்சேதுபதியின் வாய்ஸ் படத்துக்கும் பெரிதும் உதவியது. படம் பார்ப்பவர்கள் அந்த வாய்ஸை பாராட்டுவார்கள்'' என்றார்.