பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இறுதிமுயற்சி'. அக்டோபர் 10ல் ரிலீசாகிறது. தொழிலதிபரான ரஞ்சித், வியாபார நெருக்கடி காரணமாக ஒருவரிடம் 80 லட்சம் கடன் வாங்குகிறார். அவரோ கந்து வட்டி பார்ட்டி. கடன், வட்டியை திருப்பி தராதவர்களை டார்ச்சர் செய்கிறார். அந்த வில்லன் பிடியில் ரஞ்சித்தும், அவர் குடும்பமும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது கதை. அப்போது இக்கட்டான சூழலில் ஒரு முகம் தெரியாத கேரக்டர் ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுகிறது. ரஞ்சித், அவர் மனைவி, 2 குழந்தைகளை காப்பாற்றுகிறது. அந்த கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், ‛‛எனக்கும் விஜய்சேதுபதிக்கும் அதிகம் நட்பு இல்லை. ஆனாலும், கதை சொல்லி, வாய்ஸ் ஓவர் தரமுடியுமா என்று கேட்டோம். அவரோ மும்பையில் பிஸியாக இருந்தார். ஆனாலும், ஒரு நாள் அவரே சொந்த செலவில் பிளைட்டில் சென்னை வந்து, ஒரு சின்ன டப்பிங் தியேட்டரில் அந்த கேரக்டருக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தார். ஒரு பைசா பணம் வாங்கவில்லை. அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்தது. கடனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவும், அவர்களுக்கு ஆறுதலாக பேசும் விஜய்சேதுபதியின் வாய்ஸ் படத்துக்கும் பெரிதும் உதவியது. படம் பார்ப்பவர்கள் அந்த வாய்ஸை பாராட்டுவார்கள்'' என்றார்.