கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அக்ஷய் குமார் பேசும்போது தன் மகளுக்கு நடந்த சைபர் கிரைம் தாக்குதல் குறித்தும் அதிலிருந்து அவரது மக்கள் தப்பித்தது குறித்தும் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை அடிக்கடி உற்சாகப்படுத்துவது போல் பேசி அறிமுகமானார். ஒரு சில நாட்கள் கழித்து திடீரென என் மகளின் நிர்வாண படத்தை அனுப்பும்படி கூறினார். உடனடியாக என் மகள் சுதாரித்துக் கொண்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு இந்த தகவலை தன் அம்மாவிடம் சென்று கூறினார்.
ஏழாவது முதல் பத்தாவது வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை வகுப்பறையில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் ஏற்படுத்த வேண்டும். அப்படி என்றால் தான் பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த சைபர் கிரைம் தாக்குதல் ஆகாமல் தப்பிப்பார்கள்” என்று பேசினார்.