அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அக்ஷய் குமார் பேசும்போது தன் மகளுக்கு நடந்த சைபர் கிரைம் தாக்குதல் குறித்தும் அதிலிருந்து அவரது மக்கள் தப்பித்தது குறித்தும் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை அடிக்கடி உற்சாகப்படுத்துவது போல் பேசி அறிமுகமானார். ஒரு சில நாட்கள் கழித்து திடீரென என் மகளின் நிர்வாண படத்தை அனுப்பும்படி கூறினார். உடனடியாக என் மகள் சுதாரித்துக் கொண்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு இந்த தகவலை தன் அம்மாவிடம் சென்று கூறினார்.
ஏழாவது முதல் பத்தாவது வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை வகுப்பறையில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் ஏற்படுத்த வேண்டும். அப்படி என்றால் தான் பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த சைபர் கிரைம் தாக்குதல் ஆகாமல் தப்பிப்பார்கள்” என்று பேசினார்.