வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்கள்தான் இந்தியாவில் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அவற்றில் எக்ஸ் தளத்தை சினிமா ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அத்தளத்தில் சினிமா ரசிகர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வாடிக்கையாகவே உள்ளது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் தான் இப்படியான மோதலை அதிகம் உருவாக்கி வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூக வலைதளங்களை சுமார் 491 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக எக்ஸ் தளத்தின் குரூக் ஒரு தகவலைச் சொல்கிறது. அதில் 49 சதவீதம் பேஸ்புக், 32 சதவீதம் இன்ஸ்டாகிராம், 10 சதவீதம் யு டியூப், 2.7 சதவீதம் எக்ஸ் தளம் என பயனாளிகளின் சதவீதம் உள்ளது. அதாவது சுமார் 24 மில்லியன் பயனாளிகள். வெறும் 24 மில்லியன் பயனாளிகள் கொண்ட எக்ஸ் தளத்தில்தான் சினிமா ரசிகர்களுக்கான சண்டை, டிரெண்டிங் அதிகமாக நடக்கிறது. அவற்றையும் சில ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா தற்போது அவருடைய 'மாஸ் ஜாதரா' படத்திற்கான புரமோஷன்களில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“நான் சில சமயங்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை வேடிக்கைக்காக;ப பார்ப்பேன். அவை மிகவும் படைப்புத்திறன் மிக்கவை. மறுபுறம், எக்ஸ் தளம் எதிர்மறையால் நிரம்பியுள்ளது. மக்கள் அங்கு எப்போதும் எதிர்மறை அதிர்வுகளை பரப்புகின்றனர். நான் கருத்துக்களை படிப்பதில்லை, மற்றும் எதிர்மறையிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். அது என்னை தொந்தரவு செய்வதில்லை, ஆனாலும் நான் அதிலிருந்து என்னை தள்ளி வைத்திருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.




