காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி |
கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் 2வது பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' தற்போது வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் காந்தாரா படம் உருவாதற்கு காரணமான தனது சொந்த கிராமமான குந்தபுராவில் குடும்பத்துடன் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி.
தனது கிராமும், தனது குலதெய்வ கோயிலும்தான் தனக்கு பெரிய வாழ்க்கை கொடுத்ததாக நம்பும் ரிஷப் ஷெட்டி அதற்காக அந்த கிராமத்திலேயே வாழ முடிவு செய்து பெங்களூருவில் தான் வசித்த சொகுசு பங்களாவை காலி செய்து விட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக விட்டிற்கு செல்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது மண்ணின் பெருமையை 'காந்தாரா' மூலம் உலகத்துக்கு சொல்லிவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதனால் அங்கேயே சென்று வாழ முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனது முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே'' என்றார்.