நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் 2வது பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' தற்போது வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் காந்தாரா படம் உருவாதற்கு காரணமான தனது சொந்த கிராமமான குந்தபுராவில் குடும்பத்துடன் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி.
தனது கிராமும், தனது குலதெய்வ கோயிலும்தான் தனக்கு பெரிய வாழ்க்கை கொடுத்ததாக நம்பும் ரிஷப் ஷெட்டி அதற்காக அந்த கிராமத்திலேயே வாழ முடிவு செய்து பெங்களூருவில் தான் வசித்த சொகுசு பங்களாவை காலி செய்து விட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக விட்டிற்கு செல்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது மண்ணின் பெருமையை 'காந்தாரா' மூலம் உலகத்துக்கு சொல்லிவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதனால் அங்கேயே சென்று வாழ முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனது முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே'' என்றார்.




