ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் 2வது பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' தற்போது வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் காந்தாரா படம் உருவாதற்கு காரணமான தனது சொந்த கிராமமான குந்தபுராவில் குடும்பத்துடன் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி.
தனது கிராமும், தனது குலதெய்வ கோயிலும்தான் தனக்கு பெரிய வாழ்க்கை கொடுத்ததாக நம்பும் ரிஷப் ஷெட்டி அதற்காக அந்த கிராமத்திலேயே வாழ முடிவு செய்து பெங்களூருவில் தான் வசித்த சொகுசு பங்களாவை காலி செய்து விட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக விட்டிற்கு செல்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது மண்ணின் பெருமையை 'காந்தாரா' மூலம் உலகத்துக்கு சொல்லிவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதனால் அங்கேயே சென்று வாழ முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனது முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே'' என்றார்.




